என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கேரளா ரேசன் அரிசி கடத்தல்"
தேனி:
கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து தொடர்ந்து நிவாரண பொருட்களாக அரிசி, பருப்பு, காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக நிவாரண பொருட்கள் அனுப்புவது போல கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தலும் நடந்து வருவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் உத்தம பாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு சரக்கு வாகனத்தில் ரேசன் அரிசி 13 மூடைகளை கேரளாவுக்கு 2 பேர் கடத்தி சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தனர்.
அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கம்பத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் சதீஷ் (வயது27), பிச்சை மகன் மணி (30) என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் ரேசன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்